Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

புதிய தலைமுறை : கேம்பஸ் தேர்வுக்கு தயாராவோம் – 1

$
0
0

வேலை நமதே தொடர் – 8

Image result for Campus Interview

வேலை கிடைப்பது இப்போதெல்லாம் எளிமையாக இல்லை. கணினி போன்ற நிறுவனங்களிலேயே வேலை கிடைப்பது மிகக் கடினமாகி விட்டது. பத்து பேர் தேவை என விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்துக்கு குறைந்த பட்சம் ஐநூறு பேர் விண்ணப்பிக்கின்றனர். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. புதியவர்கள் வேலைக்குத் தேவை என நிறுவனங்கள் அழைப்பு விடுத்தால் பத்தாயிரம் பேர் படையெடுக்கின்றனர். எத்தனை பேர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்த இதுவே போதும் !

இத்தகைய போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைக்க மிகச் சிறந்த வழி “கேம்பஸ் தேர்வு” என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்து முயற்சி செய்வதில் பத்து சதவீதம் கஷ்டப்பட்டாலே கல்லூரி கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே கல்லூரி மாணவ மாணவியர் கேம்பஸ் தேர்வை மிக மிக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்களெனில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக முக்கியமான எதையோ ஒன்றைச் சாதித்து விட்டீர்கள் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்டர்வியூ பற்றி முழுமையாய் தெரிந்திருக்காது. கேம்பஸ் இன்டர்வியூவில் என்ன நடக்கும் ? எப்படி அதை எதிர்கொள்ளவேண்டும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது அதில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும்.

  1. முதலாவது இங்கே போட்டி குறைவு. கேம்பஸ் தேர்வில் நாம் போட்டியிடப் போவது அதிகபட்சம் சில நூறு நபர்களுடன் தான். கல்லூரிக்கு வெளியே இந்தப் போட்டி சில ஆயிரங்கள் என எகிறும். எனவே அதிகபட்சக் கவனத்துடன் கேம்பஸ் இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள். கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்.
  2. அடுத்தவர்களை விட ஒரு அடி முன்னே நிற்க முயலுங்கள். வெற்றியாளருக்கும், தோல்வியடைந்தவனுக்கும் இடையே இடைவெளி மிக மிகக் குறைவாகவே இருக்கும். அரை வினாடி நேரத்தில் கோப்பையை இழக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் போலவே கேம்பஸ் தேர்வையும் அணுகுங்கள். கொஞ்சமும் அலட்சியமோ, விளையாட்டுத் தனமோ வேண்டாம்.
  3. மற்றவர்களை விட வித்தியாசமாய் உங்களிடம் என்ன இருக்கிறது ? அடுத்தவர்களை விட அதிகமாய் உங்களுக்கு என்ன தெரியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அது தொழில்நுட்பம் சார்ந்த‌ சான்றிதழாகவும் இருக்கலாம். அல்லது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் போன்ற மென் திறமையாகவும் இருக்கலாம் ! ஒரு ஸ்பெஷாலிடியாவது உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் !
  4. பலரும் தங்களுடைய அறிவு என்பது தொழில் நுட்ப ரீதியான படிப்பு மட்டும் என நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு ! கம்யூனிகேஷன், நட்பு, சமூக அனுசரிப்பு, மரியாதை, விவாதத் திறமை, பற்றுறுதி, உரையாடல் திறமை, தலைமைப் பண்பு என ஏகப்பட்ட விஷயங்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் திறமையின் கீழ் வரும். எனவே அவற்றிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
  5. உங்கள் கையிலிருக்கும் மார்க் ஷீட் உங்களுடைய கண்ணாடி. உங்களுடைய படிப்பு ஆர்வத்தையும், கடின உழைப்பையும் அது தான் காட்டிக் கொடுக்கும். கல்லூரி காலம் முழுதும் ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பட்டியலில் ஒரு நல்ல ஸ்கோர் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை ! அதிக சதவீதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே !
  6. ஆங்கில அறிவு மிக மிக அவசியம். அதற்காக நீங்கள் சேக்ஸ்பியரைப் போல கவிதை எழுத வேண்டுமென்பதில்லை. நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லக் கூடிய அளவுக்கு அழகான ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றையெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்குப் பயன் தரும்.
  7. கம்யூனிகேஷன் என்றதும் நமக்குத் தெரிவது பேச்சும், எழுத்தும் தான் இல்லையா ? இன்னொரு வகை உரையாடலும் உண்டு. அது உடல்மொழி ! வார்த்தைகளற்ற உரையாடல் அது ! 60 சதவீதம் செய்திகளை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் என்பது கணக்கு ! எனவே உடல் மொழியில் கவனம் தேவை. பதட்டம், பயம், தடுமாற்றம் போன்ற எதையும் உங்கள் உடல் மொழி பேசாதிருப்பது நல்லது !
  8. உடல் மொழியில் சில அடிப்படை விஷயங்கள் உண்டு. கைகளை விரித்து வைத்துக் கொண்டு பேசினால் நீங்கள் உண்மையுள்ளவர், திறந்த மனமுடையவர் என்று பொருள். பின்னால் சாய்ந்து கொண்டு பேசினால் உங்களுக்கு விஷயத்தில் விருப்பமில்லை என்று பொருள். நேராக அமர்ந்து சிரித்துக் கொண்டே பேசினால் நீங்கள் ரொம்ப ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்று பொருள். விரல்களைத் தட்டிக்கொண்டே இருப்பது நீங்கள் பொறுமை இழந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும், நகம் கடிப்பது பதட்டம் என்று சொல்லும்.
  9. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தடுமாறிப் போவார்கள். உங்களுடைய கண்களில் தன்னம்பிக்கை ஒளிரட்டும். நேர்த்தியான உடை உடுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள். ஒரு முக்கியமான விஷயம், தன்னம்பிக்கை என்பது செயற்கைத் தனம் இல்லாமல் வெளிப்பட வேண்டியது அவசியம். ‘நான் ரொம்ப தன்னம்பிக்கை உடையவன் சார்’ என சொல்லாமலேயே அது தெரியவேண்டும். ஒரு புன்னகை, ஒரு தைரியமான பதில், ஒரு பாசிடிவ் மனநிலை இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.
  10. டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் மேலாண்மை ரொம்ப முக்கியம். காலம் தவறாமை என்றதும், இன்டர்வியூவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி போறது தானே அது ? என கேட்பவர்கள் உண்டு. எழுத்துத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், குழு உரையாடலில் செயல்படும் விதம், இன்டர்வியூவில் நடந்து கொள்ளும் விதம் என எல்லாவற்றையும் அது தொட்டுச் செல்லும் !
  11. சுருக்கமான ஒரு விஷயம். எல்லா நிறுவனங்களும் மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கும். குவாலிடி, காஸ்ட், டைம் இவை தான் அந்த மூன்று விஷயங்கள். தரம், விலை, காலம் ! உயர்ந்த தரத்தில், குறைவான விலையில், சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பதே முக்கியம். இந்த தத்துவத்தை மனதில் வைத்திருங்கள். பயன்படும்.
  12. நேர்முகத் தேர்வுக்கு நல்ல ஃபார்மல் ஆடை அணியுங்கள். கல்லூரி வாழ்க்கை வேறு இன்டர்வியூ வேறு. கல்லூரியில் போவது போல ஜீன்ஸ், சாயம் போன டீ-ஷர்ட் எல்லாம் ஒதுக்குங்கள். நேர்த்தியான ஆடை, டை இருந்தால் அணியலாம். நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் போன்ற சிந்தனைகளையெல்லாம் ஒதுக்குங்கள். “ஓவர் ஃபார்மல்” என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். பெண்கள் ரொம்ப ஃபேன்ஸியாகவோ, ரொம்ப இறுக்கமாகவோ இல்லாத நல்ல ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பானது.
  13. உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், சாதனைச் சான்றிதழ்கள், பயோடேட்டாக்கள், புகைப்படங்கள், பேனா , பேப்பர் என அனைத்தையும் ஒரு ஃபைலில் போட்டு அழகாக நேர்த்தியாக வரிசையாக வைத்திருங்கள். உங்களுடைய ஒழுங்கு அதில் பிரதிபலிக்கட்டும். உங்களுக்கும் தேவையற்ற பதட்டம் குறையும்.
  14. நேர்முகத் தேர்வுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்களோ இல்லையோ, நன்றாகத் தூங்குங்கள். காலையில் சோர்வின்றி எழும்புங்கள். சிறிதாய் உடற்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள். நல்ல உற்சாகமாய் நேர்முகத் தேர்வுக்கு வாருங்கள். எக்காரணம் கொண்டும் முந்திய இரவில் தூங்காமல் விழித்திருந்து சோர்வில் சிக்கி, சிக்கலில் மாட்டாதீர்கள்.
  15. “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்பது தான் பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் முதல் கேள்வி. இந்தக் கேள்வி தான் நமக்கான துருப்புச் சீட்டு. இந்த கேள்விக்கான பதிலை ரொம்ப சூப்பராகத் தயார் செய்து கொள்ளுங்கள். நிறுவனம் எதை எதிர்பார்க்குமோ அதைச் சொல்லுங்கள். உங்கள் பிளஸ் பாயின்ட்கள் எல்லாம் அதில் வரட்டும். தேவையில்லாத விஷயங்களை ஒதுக்குங்கள். “அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் ஐயா தான் கிங்க்” என்பது போன்ற விஷயங்களை விட்டு விடலாம்.
  16. கேள்விக்குப் பதில் சொல்லும் போது பராக்குப் பார்க்கவே கூடாது. கேள்விக்கும் பதிலுக்கும் ரொம்ப கவனம் செலுத்துங்கள். செல்போனை அணைத்து வைத்திருங்கள். ரொம்ப வேகமாகப் பேசாதீர்கள். “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கேட்பார்கள். அதன் பொருள் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது கேள்வி இருக்கிறதா என்பது தான். “எந்த மாதிரி வேலை இருக்கும்” என்பது போன்ற கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவே கேட்காதீர்கள்.
  17. பேசும்போது குரலும், உடல்மொழியும் இணைந்தே பேச வேண்டும். ஒரு புன்னகை நிச்சயம் தேவை. கண்ணில் பார்த்து தன்னம்பிக்கையுடன் பேசுவது நல்லது. அதே போல பேசுவதை பாதி விழுங்கி மீதியை துப்பாமல் தெளிவாய்ப் பேசுங்கள். சொல்லும் விஷயம் தப்பாய் இருந்தால் கூட சொல்லும் முறை தப்பில்லாமல் இருக்க வேண்டும் !
  18. நீங்கள் எவ்வளவு தூரம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்பது கவனிக்கப்படும். சென்னை, பங்களூர், ஹைதராபாத் இப்படி எங்கே வேணும்னாலும் வேலை செய்வேன் என்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ‘சென்னையைத் தவிர வேற எங்கேயும் போக முடியாது பாஸ்’ – என முரண்டு பிடித்தால் வாய்ப்புகள் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  19. உங்களுக்கு தனித் திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் நிறுவனங்களின் வெற்றி என்பது குழுவாக இணைந்து பணியாற்றுவதில் தான் இருக்கிறது. உங்களிடம் அந்த விருப்பமும், ஆர்வமும் இருக்க வேண்டும். குழுவாகப் பணி செய்த அனுபவங்கள் இருந்தால் அதை மறக்காமல் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, என்.எஸ்.எஸ், என்.சி.சி, கலைக்குழு போன்றவை !
  20. அழுத்தமான சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமாய் கவனிக்கப்படும். எளிதில் டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள் ? கடினமான சூழல்களில் நீங்கள் சமாளிக்க முடியுமா ? அல்லது சவால்களை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொள்வீர்களா ?இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டறியுங்கள். அழுத்தமான சூழல்களிலும் நிதானம் தவறாமல் இலட்சியங்களை நோக்கி உழைப்பவர்களையே நிறுவனங்கள் விரும்பும்.


Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!