எப்படித் தான்
தெரியப்படுத்துவேன் ?
உன்மேல் நான் கொண்ட
காதலை.
ஒரு
பூவை நீட்டும்
பழைய முறையிலா ?
வாசம் வீசும் புத்தகத்தில்
ஒளித்து வைக்கும்
மயில் பீலி வழியாகவா ?
ஒரு
நான்குவரிக் கவிதையிலா ?
இல்லை
கையெழுத்தைச் செதுக்கி
நான் செய்த
காகிதக் கடிதத்திலா ?
தெரியவில்லை எனக்கு.
எப்படி சொல்வேன் ?
படபடக்கும் என்
பட்டாம்பூச்சிச் சிறகுகளுக்கு
எந்த
பதில் பாறையையும்
சுமக்கும் தெம்பில்லை
நீயே
சொல்லி விடேன்
என்னைக் காதலிக்கிறேன் என்று.
