ஒவ்வோர் வினாடியை
இழக்கும் போதும்
கவலையாய் இருக்கிறது.
ஏதோ ஒரு
ஆனந்தம் என்
கைகளை விட்டு விட்டு
விடைபெற்றுச் செல்வதாய்.
ஏதோ ஒரு
நிறைவு
என்னை
நிறைவில்லாமல் செய்வதாய்,
ஏதோ ஓர்
மகிழ்வின் ஈரத் துளி
உலர்ந்து போவதாய்
வலிக்கிறது.
அந்த உணர்வுகளுக்குள்
புரளுகையில்
கடந்து போகின்றன
மேலும் சில வினாடிகள்.
ஒவ்வோர் வினாடியையும்
இழுக்க வேண்டும்
நிமிடமாய்
மணியாய்
காலமாய்…
அந்த வினாடிக்குள்
வாழவேண்டும்
என் மழலையில்
அழைத்தல் ஒலிக்குள் அடைபட்டு.
விலகிப் போகாத
வினாடிகள் ஒன்று சேர்ந்து
என்னைச் சுற்றி
வலை பின்னிக் கொள்ளவேண்டும்.
வினாடிகள்
விடைபெற வேண்டாம்.
நான்
விடைபெற்றுச் செல்லும் வரை.
எனக்கு
ஒரு வினாடி வாழ்க்கையே
போதும்.
மிகப் பெரியதாய்.
