Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

நெருக்குதல்கள்

$
0
0

கவிதை எழுத
மறந்து விட்டேன்.
எத்தனை முயன்றும் வரவில்லை.

என் கவிதைச் செடிகளுக்கு
செயற்கைத் தண்ணீர்
பச்சையம் தரப் போவதில்லை.

என்
விரல்களின் நுனிகளில்
இறுகக் கட்டியிருந்த
வீணை நாண்கள்
வெறும் கம்பிகளாய் நீள்கின்றன.

என்
நகங்களுக்குள்ளும் நான்
நட்டுவைத்திருந்த
நந்தவனங்களுக்கு,
இயந்திர வாசம் இப்போது.

பூக்களைப் பறித்துக் கொண்டு
சாலையில் இறங்கினால்
புழுதி வந்து
போர்வை போர்த்துகிறது.

கண்ணாடிக் கவிதையோடு
வாசல் தாண்டினால்
நெரிசல்களால்
நெரிபட்டுப் போகிறது.

அடைமழைச் செய்திகள்
அவ்வப்போது
ஆக்ரோஷமாய் வந்து
அடைகாக்கும் முட்டைகளை
உடைத்துச் செல்கின்றன.

அத்தனையும் மீறி
வந்தமரும் வேளைகளில்,
நிகழ்கின்றன
விரல்களின் வேலை நிறுத்தம்.

இந்தக் கவிதை போலவே
முற்றுப் பெறாமல்
நிற்கின்றன
அரைகுறை சிறகுகளோடு,
என் கவிதைகள்.



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!