ஏதேனும் வழியிருக்குமா ?
நம்
மாலை நேரப் பேச்சுகளை
இரவு வந்து
இழுத்து மூடக் கூடாது
நாம்
கைகோர்த்துக் கடக்கையில்
சாலையின் நீளம்
முடியவே கூடாது.
நாம்
பார்த்துக் கொள்ளும்
பொழுதுகள்
பிரியவே கூடாது.
உன் மீதான
என் பைத்தியம்
தெளியவே கூடாது.
ஏதேனும் வழியிருக்கிறதா ?
கேட்கிறேன்.
நடக்க இயலாததைச்
சொல்லத் தானே
நீ
கவிதை எழுதுகிறாய்.
இதையும் எழுதிக் கொள் என
கவிதையாய் சிரிக்கிறாய் !
இதுவும் முடியக் கூடாதே
என
எழுதிக் கொள்கிறேன் நான் !
*
